சனாதன தர்மம்
காலம் காலமாக தொடர்ந்து வரும் கடவுள்
நம்பிக்கை மற்றும் சம்பரதாயங்கள்.
ஆழ் கடலின் அமைதியாக
மலரினும் மென்மையாய்
பெண்மையின் இலக்கணமாய்
அழகின் பிறப்பிடமாய்
அன்பின் சுயரூபமாய்
கார்மேக கூந்தல் உடன்
கூவும் குயில் குரலுடைய
புருசோத்தமனின் தர்மபத்தினியாய்
ஒப்பாரில்லாதவனின் உயிராய்
ராகவனின் இதயத்தில் உறங்குபவள்
ஒழுக்கத்தில் உயர்ந்தவளாய்
பெண்மையின் பெருமைகளோடும்
தாய்மையின் தனித்துவமாய்
வற்றா கடல் போன்று கருணை உடையவளாய்
சனாதன தர்ம தலைவனின்
காவிய தலைவியாக
புனித கற்புக்கு சாட்சியாக
கருணை தெய்வமாக
எல்லோரின் தாயாக
விளங்கும் மரகதவல்லி தாயே
சீதாதேவியே உன் கதையை
உலக மனிதர்கள் அனைவரும்
அறிந்து புரிந்து உணர்ந்து
போற்றும் ஸ்ரீ ராமாயணம்
சமாதான தர்ம நீதி.
P.Muthukumaran
INSTA ID: muthukumaranp1
©MUTHUKUMARAN P