ஈசனின் கட்டளை சனாதானம்.
கழுதைக்கு குதிரையை போன்று வாழ ஆசை.
பூனைக்கு புலியை போன்று வாழ ஆசை.
மனிதனுக்கு மனம்போல் வாழ ஆசை.
ஆனால் பிரபஞ்சத்தில் ஒவ்வொரு உயிர்களும் பிறக்கும்பொழுதே ஈசன் அவரவர்களுக்கு என்ன பணி என்பதை நிர்ணயிக்கின்றார்.
அதன் படி ஒவ்வொரு உயிர்களும் வாழ்வதுதான் உலக நியதி.
வாழும் வாழ்விற்கு சிறந்த இலக்கணம்.
இலக்கணம் மீறி வாழ்வது ஈசன் வகுத்த இலக்கணத்தை பிழையாக்குவதற்கு சமம்.
பிழையாக்குவது நல்லதல்ல.
இதுவே "சனாதன தர்மம்".
இதனை ஒவ்வொரு உயிர்களும் பின்பற்றவேண்டும் என்பது ஈசனின் கட்டளை.
பிரபஞ்சத்தில் அனைத்து உயிர்களும் பின்பற்றி வாழ்கின்றன ஆனால் மனிதன் மட்டும்தான் வேறுபடுகின்றான்.
இனிவரும்காலங்களில் மனிதன் மாறவேண்டும் பின்பற்றி வாழவேண்டும் அதுவே ஈசனுக்கு செய்யும் நன்றி.
P.Muthukumaran
INSTA ID: muthukumaranp1
©MUTHUKUMARAN P